ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

குடி போதை மறக்க, மதுவிற்கு அடிமை

   குடி போதை மறக்க, மதுவிற்கு அடிமை


குடிப்பழக்கம், சிறிது சிறிதாக செய்யப்படும் தற்கொலை முயற்சியே! உடல் நலத்தைப் பலவிதங்களில் கெடுத்து, வாழ்க்கை நெறிமுறைகளையும் சிதைத்து, அவரின் மனநலத்தையும் வெகுவாக பாதிக்கிறது. அவரின் போக்கால் மனைவி மக்களும்மிகுந்த துன்பத்திற்கு ஆளாவதுடன் அவர்களின் எதிர்காலமும் கேள்விக் குறியாகிறது.
 

  1. v  குடிப்பழக்கத்திற்கான பல காரணங்களில் கூடா நட்பும் சூழ்நிலைகளும் சமூகக் கலாசாரங்களும் முக்கியமான தூண்டுகோல்களாக அமைகின்றன.
    *
  2. v   பெற்றோர் மற்றும் உடன் பிறந்தோரின் குடிப்பழக்கமும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். முதலில் ‘நண்பர்களுக்காக’ என்று சிறிதளவு மது அருந்த ஆரம்பிப்பதே நாளடைவில் மது அடிமை நிலைக்குக் கொண்டு சேர்த்துவிடும்.
    *
  3. v  சாராயம், கள் மற்றும் அயல்நாட்டு மதுவகைகள் போன்றவற்றில் உள்ள போதையூட்டும் பொருளின் பெயர் ஈத்தைல் ஆல்கஹால். இது ஒவ்வொரு மதுவகையிலும் வெவ்வேறு அளவில் உள்ளது. மதுவில் உடலைப் பாதுகாக்கும் வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் என ஏதும் இல்லை.சிறிதளவு மது அருந்தியவுடன் ஒருவித கேளிக்கை மனப்பான்மையும் போலியான மன மகிழ்ச்சியும் ஏற்படுவதால், அந்தச் சூழ்நிலையில் மதுவின் அளவை மேலும் கூட்டிச் சாப்பிடும் நிலை ஏற்படுகிறது. அதனால் நாளடைவில் தனது செயல்களைக் கட்டுப்படுத்தும் திறனை இழந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் சக்தி அற்றவர் ஆகிவிடுகிறார். மது அருந்தி விட்டு ஓட்டும் போது விபத்துக்கு ஆளாகி விபரீதமான விளைவுகளைச் சந்திக்கிறார்.
    *
  4. v   சில சமூக விரோதிகள் மித்தைல் ஆல்கஹால் என்றநச்சு கலந்த விஷச் சாராயத்தை அதிக போதை ஏற்படும் என்று நம்பி விற்பதால், அதைக் குடிப்பவர்கள் கண் பார்வை இழப்பதுடன் மரணத்தையும் தழுவுகிறார்கள்.
    *
  5. v  மதுப்பழக்கத்தினால் சிரோஸிஸ் என்னும் கல்லீரல் சுருக்க நோய் ஏற்பட்டு ரத்த வாந்தியும் மரணமும் நேரலாம்.
    *
  6. v  உணவுக் குழாய், வயிறு மற்றும் கணையம் பாதிக்கப்படுவதால் வயிற்று வலி மற்றும் நீரிழிவு நோய் உண்டாகலாம்.
    *
  7. v  கண் மற்றும் நரம்பு மண்டலம் பல விதங்களில் பாதிக்கப்படலாம். மாரடைப்பு நோய் மற்றும் பக்கவாதம் போன்ற ஆபத்தான பின் விளைவுகள் ரத்தக் குழாய்களின் பாதிப்பால் ஏற்படலாம்.
    *
  8. v   நுரையீரலைப் பாதிக்கும் நிமோனியா காய்ச்சல் அடிக்கடி ஏற்படும்.
    *
  9. v  அடிக்கடி மனைவியிடம் சண்டையிட்டு குடும்ப அமைதியை இழந்துவிடுவார்கள். அடிக்கடி குற்ற உணர்வுகளுக்கு ஆளாகி, தன்னம்பிக்கையை இழந்து அவதிப்படுவார்கள்.
    *
  10. v  நினைவாற்றலும் குறைந்துவிடுவதால் சற்று நேரத்திற்குமுன் நடந்ததுகூட நினைவில் இருக்காத சூழ்நிலை உருவாகலாம்.
    *
  11. v   குடிக்கு அடிமையானவர் குடிப்பழக்கத்தை நிறுத்திய சில மணி நேரத்திலேயே உடல்நடுக்கம், பயம், பதட்டம், மனத் தளர்ச்சி, எரிச்சல், தூக்கமின்மை, ரத்த அழுத்தம் அதிகமாகுதல் மற்றும் வலிப்பு ஆகியவை ஏற்படலாம்.
                     மது அடிமை மூலிகை  சிகிச்சை பக்க விளைவுகள் ஏதும் இல்லாதமருந்து

தொடர்புக்கு ,

இப்படிக்கு 

 

  சித்த மருத்துவ மாவட்ட தலைவர்
 Dr .P.Jagadeesh kumar Rmp(am).,Phd
 மூலிகை மருத்துவர்   .
Cell - 9688883777
  

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக