நெல்லிக்காயோட
அறிவியல் பேரு...
பைலாந்தஸ் எம்ப்ளிகா. நெல்லிக்காய் மரத்தின் இலைகளோட சாறு
ரொம்ப
நாளா
ஆறாம
இருக்குற புண்ணுக்கு நல்ல
மருந்து. இலையோட
வடிசாற்றையும், வெந்தயத்தையும் கலந்து
சாப்பிட்டா, வயிற்றுப்போக்கு குணமாகும்.
பட்டையும், வேரும் உடலுக்கு வலு
சேர்க்கும். மலர்கள் குளிர்ச்சி தருபவை.
வைட்டமின் சி
குறைவால வரும்
ஸ்கர்வி நோயைத்
தீர்க்குது. குளிர்ச்சியைத் தருது.
ஜீரணத்தை ஊக்குவிக்குது. சிறுநீரக கோளாறுகளைப் போக்கும். ரத்த
சோகை,
மஞ்சள்
காமாலைக்கு சிறந்த
மருந்து இந்த
நெல்லிக்காய்தான்.
அது மட்டுமா...இதோட
விதைகளை அரைச்சிக் கண்வலிக்கு பூசினா
உடனே
குணமாகும். இதோட
வடிசாறு ஆஸ்துமா கோளாறுக்கும், மூச்சுக்குழல் அழற்சியையும் போக்குது., இப்பவே
நெல்லிக்காய சாப்பிட ஆரம்பிச்சிட்டீங்களா..?! நெல்லிக்காய்ன உடனே
உங்களுக்கு வேற
ஒண்ணும் ஞாபகத்துக்கு வரணுமே...!
கரெக்ட்...நீங்க நெனச்சது சரிதான்.! சங்க
இலக்கியத்துல தமிழ்
நீண்ட
நாள்
வாழனும்னு ஆசைப்பட்டு, அதியமான், நம்ம
அவ்வையாருக்கு கொடுத்ததும் இதே
நெல்லிக்கனிதான்.